01.
மாணவன், தன்
தாய்மொழியில் எழுதவும்
படிக்கவும் முதலில்
கற்பியுங்கள். அது
அவன் வள
வாழ்விற்கு வழி
வகுக்கும். - எச். சி.
வெல்சு.
02. முதலில் என்
தாய்மொழியைத்தான் பரிபூரணமாகத் தெரிந்துகொள்வேன். அதன்
பிறகுதான் அதிகமாக
நெருங்கி உறவாடும்
அடுத்தவரின் மொழியை
அறிந்துகொள்வேன். -
ஐன்சுடைன்.
03.
தாய்மொழியைத் திறமையாகப் பயன்படுத்தத் தெரியாத
எவனும் பிறமொழியைத்
திறமையாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுதல் மிகவும் கடினம். -
பெர்னாட்சா.
04.
ஒருவன் மற்ற அறிவுத் துறைகளைக் கற்கலாம் அல்லது கற்காமல் இருக்கலாம். ஆனால், தாய்மொழியைக் கற்றே ஆக வேண்டும். - என்றி
பிரார்ப்ரூக்.
05.
எனக்கு ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானல், நான் இன்றே நம் மாணவர்கள் அந்நியமொழி மூலம் கல்வி கற்பதை நிறுத்திவிடுவேன். எல்லா ஆசிரியர்களையும் விரிவுரையாளர்களையும் உடனே தாய்மொழி மூலம் கற்பிக்கும்படி கட்டளையிடுவேன். எதிப்பவர்களை வேலையிலிருந்து விலக்கிவிடுவேன். பாடப் புத்தகங்கள் தயாராகும் வரையில் காத்திருக்க மாட்டேன். - மகாத்மா
காந்தி.(22.06.1947)