லட்சுமியை அழையுங்கள்
நமக்கு நன்மை
என்றது ஆத்திகர்கள் குரல்.
அதை கேட்ட
அன்பன்
அழைத்தான் லட்சுமியை!
அவளும் வந்தாள்...!
திருடர்களும் வந்தார்கள்.
அறிந்தான் பின்
லட்சுமி வந்ததால்
நன்மை அல்ல,
இழப்பு தான்
மனநிம்மதி என்று!
சோலை என்பது ஐவகை நிலங்களின் தன்மைகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ஐம்புலனுக்கும் இனிமை அளிப்பதாக அமையும். தமிழ் என்பதும் ஒரு சோலைப் போன்றது. தமிழ் அனைத்து விடயங்களை உள்ளடக்கியதாகவும் மனிதனுக்கு தேவையான அனைத்தும் இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இப் பெயர் வைக்கப்பட்டது.